17 ஜூலை, 2009

இடம்-பொருள்


இடம்-பொருள்



அனுதினமும் உன் நினைவில்
அப்ரைஸல் இல்லை எனும் கவலை!
ஒரு மாலை நேரபொழுதில்
சாலை ஓர குடிலில் காது கொடுத்து கேட்டுப்பார்!
உன்னால் முடியாது
நடந்தால் இடை ஒடியும் உனக்கு!
முடிந்தால் தூதுவிட்டு வேவுபார்

நீ அனுதினமும் முனகும் அதே வார்த்தை,
கெஞ்சும் மழலை மொழிகொண்டு
கொஞ்சம் பிரித்து வாசிக்கபட்டிருக்கும்

ஆனால் அதிக கண்ணீருடன்,
அதீத சோகத்துடன்,
அதிக ஏக்கத்துடன்,
அதீத கவலையுடன்
"அப்பா ரைஸ்" இல்லை என்று....
வார்த்தைகளுக்கு இடம்-பொருள் உண்டு.

- முத்துகுமார்.கோ

1 comments:

Market Callz சொன்னது…

மனிதனுக்குள் உள்ள ஏற்ற தாழ்வுகளை, அருமையாக சுட்டியுள்ளீர்கள் முத்துக்குமார். இருப்பவன், இல்லாதவன் என்ற பேதம் மறைந்தால், இப்பசிக்கொடுமை நம்மை விட்டு நீங்கும்.

கருத்துரையிடுக